சரிபார்க்கிறது

                 

பூ -தானம்

சமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே /

விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத சாரம் க்ஷமஸ்வ மே //

 

           அன்பர்களே , இன்றளவும் நமது சனாதனமான ஹிந்து தர்மம் நிலை பெற்று நிற்கிறது என்றால் அது நமது முன்னோர்களின் தர்ம உள்ளதினால் தான் என்பது மறுக்க முடியாத ஒன்று. இன்றளவும் நாம் ஏதாவது ஆலயங்களிற்கு சென்றாலும் நாம் அங்கு உணர்வது நமது முன்னோர்கள் எவ்வாறெல்லாம் தர்மிஷ்டர்களாகவும் , தர்மத்தில் ஷ்ரத்தேயர்களாகவும் இருந்தார்கள் என்பதே. நமக்கு அனைத்து விதமான நற்பணிகளும் புரிவதற்கு முதலில் தேவை படுவது ஓர் உயர்ந்த பூமி ஆகும் . இந்த பூலோகமே நமக்கு இறைவனால் அளிக்கப்பட்ட கொடை ஆகும். இதில் நாம் பிறந்தது முதலாக எத்தகைய கொடும் செயல்கள் புரிகின்றோம் , எத்தகைய நற்செயல்கள் புரிகின்றோம் என்பது நாம் நன்கு அறிந்ததே. “உத்ருதாசி வராஹேந “ என்று வேதம் கூறும் வழியில் எம்பெருமான்     “ஸ்ரீ வராஹ” அவதாரம் எடுத்து நமக்கு இந்த பூமியினை காத்து அருளினார். அவருக்கு நாம் நமது நன்றிக்கடனாக “தலையள்ளால் கைமாரிள்ளேன்” என்றிடினும் தற்பொழுது இந்த திருப்பணிக்கும் அதை தொடர்ந்து வரக்கூடிய “வேத-ப்ரபந்த பாடசாலை” மற்றும் “கோ – சாலை” போன்ற கைங்கர்யத்திற்கு பூ தானம் தேவை படுகின்றது . இத்தகைய பூ தானத்தினில் தாங்கள் கலந்து கொண்டு , “எம்பெருமான்” திருப்பணி இனிதே நடைபெற பூதானம் அளித்து அருளினை பெறலாம்.

           மேலும் இத்தகைய பூ தானத்தினால் நாம் நமது முன்னோர்களிற்கு சரியாக புரிந்திடாத பித்ரு பூஜன தோஷங்களும் நிவர்த்தி ஆகி , எம்பெருமான் மற்றும் நமது குல முன்னோர்களின் ஆசிகளும் நமக்கு கிடைத்திடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தொடர்பிற்கு :- 94880 16433 / 94444 69965